மதுரை நகர் டி.பி.கே. சாலையில் உள்ள பழங்காநத்தம் பகுதி மற்றும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி சாலைகளில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?