ஏரலில் இருந்து மேல மங்களகுறிச்சி, மங்களபுரம், இரட்டை திருப்பதி, சிவராமமங்கலம், வரதராஜபுரம், காடுவெட்டி, ஆழ்வார்தோப்பு, நவலட்சுமிபுரம், நளராஜபுரம் வழியாக ஸ்ரீவைகுண்டத்துக்கு பஸ் வசதி இல்லை. சமீபத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்சும் பின்னர் நிறுத்தப்பட்டது. எனவே பஸ் வசதி இல்லாத கிராமங்கள் வழியாக அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.