ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெம்போ வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் தற்போது தொடங்கியுள்ளது. விதிமுறைகளை மீறி டெம்போ வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.