சோளிங்கர் தாலுகா பாணாவரத்தில் அம்பேத்கர் சிலை அருகில் வளைவு பகுதியில் கடை ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்தக் கடை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் அப்பகுதியில் பஸ் நிறுத்தமும் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, பாணாவரம்.