ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள், பஸ்கள் சென்று வர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க ேபாலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.