வாகன நெரிசல்

Update: 2023-09-24 12:13 GMT

வேலூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் பஸ்கள் எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை. காந்திரோடு சந்திப்பில் பகல் வேளையில் போக்குவரத்துப் போலீசாரை நிறுத்தி வாகன நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விதியை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-தேவராஜன், தோட்டப்பாளையம்.

மேலும் செய்திகள்