போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-16 17:29 GMT

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜோதி நகர் வரை பிரதான திருத்தணி நெடுஞ்சாலையில் தினமும் காலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக கடைகள், மருத்துவமனை, இதர பணிகளுக்காக வந்து ெசல்ல சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியோர் போக்குவரத்து நெரிசலால் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷோபன்பாபு, அரக்கோணம்.

மேலும் செய்திகள்