பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் செல்ல முற்படும்போது மெயின் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் சிக்னல் இல்லாததால் பஸ்கள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பஸ்நிலையத்திற்கு முன்புள்ள சிக்னல் விளக்குகளை உடனடியாக சரி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அர்ஜூன்தாஸ், பல்லடம்.