கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மேலும், மாடுகளின் உரிமையாளர்கள் காலையில் மாட்டை அவிழ்த்து விட்டுவிடுவதால், அவை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தி வருகின்றன. இதனால், பொதுமக்கள் உயிருக்கு பயந்து ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பள்ளபட்டி ரோடு பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.