போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-18 13:47 GMT

செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் செல்கின்றன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் காலை, இரவில் பஸ் நிலையம் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்கின்றன. புதிய பஸ் நிலையத்தை அடுத்த எம்.ஜி.ஆர். சிலை அருகில் தனியார் பஸ்கள் வரிசையாக நிற்பதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும் செய்திகள்