போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-22 16:19 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு போர்டின் பேட்டை விநாயகர் கோவில் பகுதி சாலை ஒரு வழி போக்குவரத்தாகும். போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள இந்தப் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தினால் வாகனங்கள் சீராக செல்லும். வாரச்சந்தை முதல் திருத்தணி சாலை, தென் வன்னியர் வீதி பகுதிகளில் கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்