போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-12 16:36 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை பஸ் நிறுத்தம் முதல் திருத்தணி ரோடு ஜோதி நகர் வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காக வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல மாணவர்களும், முதியோர்களும் சிரமப்படுகின்றனர். எனவே நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராம்குமார், அரக்கோணம். 

மேலும் செய்திகள்