போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-23 10:30 GMT

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாலாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போதிய போலீசாரை நியமிக்க வேண்டும்.

-செல்வராஜ், சம்மந்திகுப்பம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி