போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-02 13:05 GMT

அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்குள்ள ஊழியர்கள் விரைந்து பணியை மேற்கொண்டு முடித்து அனுப்பாததால் வங்கி முன்பு தினமும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர்களின் மோட்டார்சைக்கிள்களால் கனரக வாகனங்கள் திருப்பத்தில் திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், சமூக ஆர்வலர் அரக்கோணம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி