நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2024-06-16 20:49 GMT

வேலூரில் இருந்து ஆரணி, பெரணமல்லூர் வழியாக தேசூருக்கு பல ஆண்டுகளாக தடம் எண்:225வி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், வியாபாரிகள், விவசாயிகள் பயன் அடைந்தனர். அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எமரேசன், தேசூர். 

மேலும் செய்திகள்