பஸ்சை நீட்டித்து இயக்க வேண்டும்

Update: 2022-08-21 09:53 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் மேல்சீசமங்கலம் கிராமம் உள்ளது. செய்யாறில் இருந்து தடம் எண்:59 என்ற பஸ் முனுகப்பட்டு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பஸ்சை மேல்சீசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு இயக்கினால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று வர வசதியாக இருக்கும். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், செய்யாறு தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம் செல்ல வசதியாக இருக்கும். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜி.சதீஷ்குமார், மேல்சீசமங்கலம் 

மேலும் செய்திகள்