பஸ்சை நீட்டித்து இயக்க வேண்டும்

Update: 2024-07-07 20:09 GMT

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காலை நேரத்தில் இங்கிருந்து அரக்கோணம் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. டி2 என்ற அரசு பஸ் திருத்தணியில் இருந்து புறப்பட்டு பரவத்தூர் வழியாக அரக்கோணம் செல்கிறது. அந்த டி2 அரசு பஸ்சை திருத்தணி, பரவத்தூர், சோளிங்கர் வரை நீடித்து, பின்னர் சோளிங்கர், பரவத்தூர், அரக்கோணம் வரை இயக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெ.சு. மணி, பரவத்தூர், சோளிங்கர்.

மேலும் செய்திகள்