நிறுத்தத்தில் நிற்காத பஸ்களால் மாணவர்கள் அவதி

Update: 2022-10-19 12:11 GMT

ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆம்பூருக்கு அரசு டவுன் பஸ்களில் சென்று படித்து வருகின்றனர். சின்னவரிகம் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். சின்னவரிகம் நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள் சற்று தூரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்பு நிற்கிறது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சின்னவரிகம் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

-வெ.கோகுல் என்ற சின்னா, சின்னவரிகம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி