தனியார் பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-12-17 16:59 GMT

செய்யாறு தொகுதியில் மாங்கால் கூட்ரோடு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை செய்யாறு மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து தனியார் பஸ்கள் மூலம் அழைத்து வருகின்றனர். அந்த பஸ்கள் காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு எதிரே வரும் வாகனங்களுக்காக ஒதுங்கி செல்லாமலும், பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும் வேகமாக செல்கின்றன. இந்த தனியார் பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், மாங்கால் கூட்ரோடு. 

மேலும் செய்திகள்