வாகன நிறுத்துமிட வசதி வேண்டும்

Update: 2023-10-01 17:10 GMT

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லை. மேலும் முக்கிய நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருவண்ணாமலையில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்