இரவில் இயக்கப்பட்ட பஸ் நிறுத்தம்

Update: 2023-02-08 16:26 GMT

திருவண்ணாமலையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் தனியார் பஸ் மெய்யூர், வரகூர், காம்பட்டு கூட்ரோடு, வாணாபுரம், குங்கிலியநத்தம், பெருந்துறைப்பட்டு, வாழவச்சனூர் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டில் இரவு நிறுத்தப்பட்டு அதிகாலை 5 மணிக்கு மீண்டும் மூங்கில்துறைபட்டு வழியாக திருவண்ணாமலை சென்று வேலூர் சென்று வந்தது. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் அந்தத் தனியார் பஸ் வருவது கிடையாது. இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பஸ்சை எதிர் பார்த்து பயணித்து வந்தனர்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த பஸ் இயக்கப்படாததால் பயணிகள் கடும் சிரமப்படுகிறார்கள். பயணிகள் நலன் கருதி தனியார் பஸ் இயக்கப்பட வேண்டும்.

-சிவக்குமார், குங்கிலியநத்தம்.

மேலும் செய்திகள்