சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்ல போதிய அரசு டவுன் பஸ்கள் இல்லை. இதனால் இப்பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எஸ்.புதூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.