திருச்சி மாவட்டம் முருங்கப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய பொதுவழிப்பாதையை ரெயில்வே துறையினர் முன்னறிவிப்பின்றி திடீரென அடைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் ஆன்மிக வழிபாட்டிற்குச் செல்வோர் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த இந்த அத்தியாவசியப் பாதை மூடப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அடைக்கப்பட்டுள்ள இந்த பொதுவழிப்பாதையை உடனடியாகத் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.