மாணவர்கள் அவதி

Update: 2026-07-05 11:28 GMT

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி வழித்தடத்தில் செல்லும் திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் சுங்கச்சாவடி அருகிலேயே நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்