அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலியை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். நகரங்களில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், நகர பஸ்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஹாரன்களை பொருத்தி அதிக சத்தத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர். இத்தகைய ஹாரன்களை போக்குவரத்து துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.