கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடரி ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் கடும் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?