நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.40 மணிக்கு மூலைக்கரைப்பட்டி, சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.