அரசு பஸ் நின்று செல்லுமா?

Update: 2026-04-26 16:38 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளிரோடு, சரவணாநகர் இணைப்பு சாலை அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. ஆரம்பத்தில் நின்று வந்த பஸ்கள் தற்போது நின்று செல்லவில்லை. ஆனால் அனைத்து தனியார் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. அதேபோல் கடலூர் - திருவந்திபுரம் மார்க்கமாகவும், திருவந்திபுரம்- கடலூர் மார்க்கமாகவும் அனைத்து அரசு பஸ்களும் நின்று சென்றால், இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி மக்கள் பயன் அடைவார்கள்.

மேலும் செய்திகள்