கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக வேகத்தடை மீது வாகனங்கள் செல்லும்போது அருகிலுள்ள குடியிருப்புகள் அதிர்ந்து வந்தன. இதனால் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அந்த வேகத்தடையை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு நன்றி.