தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு இரவு 11 மணிக்கு செல்லும் பஸ் கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் புதுக்கோட்டை, வாகைகுளம், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.