அந்தியூரில் இருந்து 20சி என்ற அரசு பஸ் தினமும் மாலை 5.35 மணிக்கு கோபிக்கு இயக்கப்படும். ஆனால் இந்த பஸ் கடந்த 8 மாதங்களாக வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் மாலை 6.15 மணிக்கு காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. 10 நிமிட இடைவெளியில் அடுத்த டவுன் பஸ் 20டி இயக்கப்படுகிறது. எனவே 20சி அரசு பஸ்சை உரிய நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?