பர்கூர்-ஜெகதேவி ரோட்டில் தென்பெண்ணை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டி எதிரில் உள்ள சாலையில் சத்தள பள்ளியில் ஜல்லி கிரசர்கள் உள்ளன. அங்கு டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான கற்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்போது சாலையில் உள்ள தூசு பறப்பதினால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிப்பர் லாரிகள் அதிக பாரம் ஏற்றுவதையும், வேகமாக வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.