அந்தியூரில் இருந்து கோபிக்கு தினமும் காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு செல்கிறது. அதற்கு முன்னதாக வகுப்புகள் தொடங்கிவிடுவதால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை 8.10 மணி மற்றும் மாலை 5.15 மணிக்கு அரசு டவுன் பஸ்சை கோபி வழியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.