பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலையபாளையம் பகுதிக்கு இதுவரை பஸ்வசதி இல்லை. இதனால் இங்கிருந்து 2கி.மீ தொலைவில் உள்ள கிடாதுறை பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலமாக பல்லடம், சோமனூர் போன்ற நகர்ப்பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறாாகள். எனவே பல்லடம் பகுதியில் இருந்து கிடாதுறை வழியாக சோமனூர் வரை அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கார்மேகம், பூமலூர்.