ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.