ஆஸ்ராமம்-கரியமாணிக்கபுரம் இடையே செல்லும் கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஆஸ்ராமம்-கரியமாணிக்கபுரம் இடையே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கிழக்கு பகுதியில் சாலையின் வளைவுகளை குறிக்கும் வகையில் குறியீட்டு பலகைகளை வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இடது புறம் வைக்கப்பட்டுள்ள பலகையில் சாலை வலது பக்கம் திரும்புவதாகவும், வலது பக்க பலகையில் சாலை இடது பக்கம் திரும்புவதாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தவறான குறியீட்டு பலகையை அகற்றி விட்டு சரியான பலகையை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உலகப்பன், கரியமாணிக்கபுரம்.