பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள்

Update: 2026-08-09 13:39 GMT

கோவை உக்கடத்தில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்றுவது இல்லை. சில அரசு பஸ்களும் கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்ற தயங்குகின்றனர். குறிப்பாக மாலை 4 மணிக்கு பிறகு எந்த பஸ்களிலும் ஏற்ற மறுப்பதால் கிணத்துக்கடவை சேர்ந்த பயணிகள் தவிப்புக்கு ஆளாகின்றனர். எனவே கிணத்துக்கடவு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி