சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.