நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு 15 ‘ஏ’, 33‘டி’ என 2 அரசு பஸ்கள் திருப்பதிசாரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த அரசு பஸ்கள் முறையாக திருப்பதிசாரம் வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி திருப்பதிசாரம் வழியாக சீரான பஸ்வசதி ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணபதி, திருப்பதிசாரம்.