புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒனறியம் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதன் காரணத்தினால் இந்த பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது சாலை சரி செய்யப்பட்ட நிலையிலும், காயாம்பட்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் காயம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சடையம்பட்டிக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.