உத்தமபாளையம் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை தனியார் பஸ்கள் பயன்படுத்த தடை விதிப்பதுடன், அவற்றை பறிமுதல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.