கோபி-அந்தியூர் இடையே இயக்கப்பட்டு வந்த ஏ20 என்ற அரசு டவுன் பஸ் கடந்த 4½ ஆண்டுகளாக காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோபியில் இருந்து இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பயணிகள் நலன்கருதி நிறுத்தப்பட்ட ஏ20 அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.