ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாகன ஓட்டிகள் மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், பாதசாரிகள் அச்சமடைகின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.