பஸ் வசதி தேவை

Update: 2026-01-18 16:42 GMT

கோபியில் இருந்து அந்தியூர் மார்க்கமாக மாலை 6.10 மணிக்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். 6.30 மணிக்கு மேல் வரும் பஸ்களில் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி மீண்டும் ஏ20 பஸ்சை மாலை 6.10 மணிக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்