மாரண்டஅள்ளி நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே மாரண்டஅள்ளி போலீசார் இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.