கள்ளக்குறிச்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி நான்கு வழிச்சாலை உள்ள போதும் சரக்கு வாகனங்கள், லாாிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கனரக மற்றும் சரக்கு வாகனங்களை நகருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.