கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் வணிக வளாகங்கள், கழிப்பிட கட்டிடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகள் இருந்தும் புறநகர் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அனைத்து புறநகர் பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லுமா?