கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து அதிகமுள்ள துருகம் சாலை, சங்கராபுரம் சாலையில் இருசக்கரவாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்கள் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சாலையில் வாகனங்களை நிறுத்தும் வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.