சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் வெளியூர் பஸ்கள் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் பயணிகள் நலனுக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூரையின் மேல் பகுதி மிகவும் சேதம் அடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதனால் மழையிலும், வெயிலிலும் பயணிகள் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?