ஈரோடு பஸ் நிலையத்தையொட்டி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. நாச்சியப்பா வீதி ஷேர் ஆட்டோ நிறுத்தும் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சாலையை அடைத்துக்கொண்டு விளம்பர பலகைகள் வைப்பதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் உள்ளது. எனவே இங்கு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க மாநகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.